பிரபல நடிகை திவ்யா உண்ணிக்கு இரண்டாவது திருமணம்..

செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (11:56 IST)
பிரபல மலையாள நடிகையான திவ்யா உண்ணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

 
‘சபாஷ்’, ‘கண்ணன் வருவான்’, ‘பாளையத்து அம்மன்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் திவ்யா உண்ணி. கேரளாவைச் சேர்ந்த இவர், ஏகப்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல, தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
 
தன்னுடைய முதல் கணவரைப் பிரிந்துவிட்டதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்த திவ்யா உண்ணி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தார்.

 
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த இன்ஜினீயரான அருண் குமார் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார் திவ்யா உண்ணி. இவர்களது திருமணம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹோஸ்டன் நகரில் இருக்கும் குருவாயூரப்பன் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்