Film Fare விருதுகளை வைத்து கக்கூஸ் கைப்பிடி செய்த நடிகர்! சர்ச்சைக்குள்ளான நஸ்ருதீன் ஷா!

Prasanth Karthick

வெள்ளி, 30 மே 2025 (12:22 IST)

பிரபல இந்தி நடிகரான நஸ்ருதீன் ஷா தனக்கு அளிக்கப்பட்ட விருதுகளை கழிவறை கைப்பிடியாக பயன்படுத்துவதாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தி சினிமாவில் பழம்பெறும் நடிகராக விளங்குபவர் நஸ்ருதீன் ஷா. தனது தத்ரூபமான நடிப்பால் உலக அளவில் அடையாளம் காணப்படும் இந்திய நடிகர்கள் முக்கியமானவராக உள்ள நஸ்ருதீன் ஷா இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றவர்.

 

சமீபத்தில் விருதுகள் குறித்து பேசிய நஸ்ருதீன் ஷா “எல்லா நடிகர்களுமே ஒரு குறிப்பிட்ட கதையின் கதாப்பாத்திரமாக மாறி அந்த கதையை மக்களுக்கு உணர்த்தும் வகையில் நடிக்கிறார்கள். அவர்களை அழைத்து அவர்களில் ஒருவரை சிறந்தவர் என விருது கொடுப்பது எந்த அளவுக்கு நியாயம்? நான் சமீபமாக வழங்கப்பட்ட ஃபிலிம்பேர் விருதுகளுக்கு செல்லவில்லை.

 

ஏற்கனவே வாங்கிய விருதுகளை நான் கட்டிய பண்ணை வீட்டின் கழிவறைக்கு கைப்பிடியாக அமைத்திருக்கிறேன். கழிப்பறை செல்லும் நீங்கள் எவரும் இரண்டு முறை உங்கள் கையால் விருதை பெற முடியும்” என கிண்டலாக கூறியுள்ளார்.

 

ஃபிலிம் பேர் உள்ளிட்ட திரைத்துறை விருதுகளை அவர் கிண்டல் செய்திருந்தாலும், இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்ம விருதுகளை பெற்றதே தனது வாழ்வின் மதிப்பு வாய்ந்த தருணம் என அவர் பேசியுள்ளார். தற்போது புற்றீசல் போல கிளம்பியுள்ள திரை விருது விழாக்களை குப்பை என அவர் சாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்