அஜித்தின் அடுத்த படத்தை தனுஷ் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும், அஜித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒன்லைன் கதை கூறிய தனுஷ், விரைவில் நேரில் சந்தித்து முழு கதையை கூற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இருவரும் சந்திக்க முடியாத சூழ்நிலை அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.
அஜித் சென்னை வந்த போது, தாய்லாந்துக்கு தனுஷ் படப்பிடிப்புக்கு சென்று விட்டதாகவும், தாய்லாந்து படப்பிடிப்பை முடித்துவிட்டு தனுஷ் சென்னை வந்த போது, அஜித் மீண்டும் கார் ரேஸ் போட்டிக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால், அஜித்–தனுஷ் சந்திப்பு இதுவரை நடக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், அதே நேரத்தில் அஜித் ஒரு குறிப்பிட்ட தேதியை தனுஷிடம் சொல்லி, "அந்த தேதியில் தான் துபாயில் இருப்பேன்; முடிந்தால் வந்து சந்திக்கவும்" என்று தகவல் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, இன்னும் சில நாட்களில் அஜித்–தனுஷ் சந்திப்பு துபாயில் நடக்கும் என்றும், அப்போது தனுஷ் முழு கதையையும் அஜித்துக்கு கூறுவார் என்றும் புறப்படுகிறது.
இருப்பினும், அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பிறகு வரும் படத்தை ஒரு வேலை அஜித் ஒப்புக்கொண்டால் தனுஷ் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.