''நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம்''.- ஏ.ஆர்.ரஹ்மானை புகழ்ந்த பிரபல இயக்குனர்

செவ்வாய், 4 ஜூலை 2023 (19:53 IST)
உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இத்திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகும் முன்பு பல சர்ச்சைகள் இருந்த நிலையில்,   நேற்று முன் தினம் ரிலீஸ்  ஆன மாமன்னன் படம்  நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனால் படக்குழு மகிழ்ச்சியடைந்து, இன்று இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடினர். இப்படத்ததை முதல்வர் முக.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் பராட்டியிருந்தனர்.

இப்படத்தின் வெற்றியை  அடுத்து,  இயக்குனர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் காரை உதயநிதி பரிசளித்தார். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வசூல் குவித்து வருகிறது.

இந்த  நிலையில்,  மாமன்னன் படத்திற்கு இசையமைத்த  ஏ.ஆர்.ரஹ்மானை  இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தன் டுவிட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழில் இப்படி ஒரு பாடல் கேட்டு எவ்வளவு நாளாயிற்று !!

#நெஞ்சமேநெஞ்சமே
ஐயா ஏ.ஆர்.ரஹ்மான்  தலைவா!
நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம்.
என்ன ஒரு வரிகள்
#யுகபாரதி ( பாடலாசிரியர்)
#மாமன்னன் – என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் இப்படி ஒரு பாடல் கேட்டு எவ்வளவு நாளாயிற்று !! #நெஞ்சமேநெஞ்சமே
ஐயா @arrahman தலைவா!
நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம்.
என்ன ஒரு வரிகள் #யுகபாரதி #மாமன்னன்

— selvaraghavan (@selvaraghavan) July 4, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்