இன்றைய மேட்சில் பாகிஸ்தானுக்கு ஆப்பு வைப்போம் - ரோகித் ஷர்மா தடாலடி

ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (11:53 IST)
ஆசிய கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியினரை கண்டிப்பாக வீழ்த்துவோம் என இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2018 தொடர் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. 
 
கடந்த  19ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில், 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்தியா - பாகிஸ்தான் அணி மீண்டும் மோத இருக்கிறது. 
இதுகுறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித்ஷர்மா, கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது போல இந்த ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணியை வீழ்த்துவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
 
மறுபுறம் கடைசி ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் இந்த ஆட்டத்தில் இந்தியாவை தோற்கடிக்க பாகிஸ்தான் வீரர்கள் கடுமையாக பிராக்டீஸ் செய்து வருகிறார்கள். இந்த மேட்சில் வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்