விராட் கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தது யார்? தீவிர விசாரணை

புதன், 3 நவம்பர் 2021 (16:29 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மகளுக்கு பாலியல் விரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் கேப்டன்ஷிப் கடந்த சில மாதங்களாக சரியில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணியின் தோல்வி முழுக்க முழுக்க விராட் கோலியின் தனிப்பட்ட திட்டங்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்று கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்து விராட் கோலியை திட்ட தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த நிலையில் டுவிட்டர் மூலம் விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இந்தியாவை சேர்ந்தவர் என்பது இப்போதைக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்