டாஸ் வென்ற தெ.ஆ.அணி பந்துவீச்சு: முதல் ஓவரிலேயே இந்திய விக்கெட்

ஞாயிறு, 12 ஜூன் 2022 (19:21 IST)
டாஸ் வென்ற தெ.ஆ.அணி பந்துவீச்சு: முதல் ஓவரிலேயே இந்திய விக்கெட்
இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று கட்டாக் நகரில் நடைபெற்று வருகிறது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி களத்தில் இறங்கியது
 
முதல் ஓவரின் 5வது பந்தில் ருத்ராஜ் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதனை அடுத்து தற்போது இசான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 ஏற்கனவே முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்