விராத் அவுட்டாலும் அடித்து நொறுக்கும் ரிஷப் பண்ட்- கே.எல்.ராகு!

வெள்ளி, 21 ஜனவரி 2022 (16:12 IST)
விராத் அவுட்டாலும் அடித்து நொறுக்கும் ரிஷப் பண்ட்- கே.எல்.ராகு!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி அவுட் ஆன போதிலும் ரிஷப் பண்ட் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் அடித்து நொறுக்கி வருகின்றனர்
 
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 2வது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது
 
இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆனார் என்பதும் ஷிகர் தவான் 29 ரன்களில் அவுட் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் அரை சதத்தை தாண்டி தற்போது அபாரமாக விளையாடி வருகின்றனர். சற்று முன் வரை இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது என்பது இதே ரீதியில் ரன் சென்றால் 300 ரன்களை தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்