87 வருடங்களில் முதல்முறையாக ரஞ்சி கோப்பை ரத்து?

ஞாயிறு, 31 ஜனவரி 2021 (18:10 IST)
87 வருடங்களில் முதல்முறையாக ரஞ்சி கோப்பை ரத்து?
கடந்த 87 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பையை முதன்முதலாக இந்த ஆண்டு ரத்து செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ரஞ்சி கோப்பை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது
 
கடந்த 87 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் ரஞ்சி கோப்பை இந்த ஆண்டு ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தொடங்கி ஜூன் முதல் வாரத்திற்குள் நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பல ஆண்டு காலமாக நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையை ரத்து செய்துவிட்டு ஐபிஎல் போட்டிக்கு மட்டும் பிசிசிஐ அனுமதி வழங்கி இருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்