13 ஓவர்களில் முடிந்தது மேட்ச்.. 47 பந்துகளில் 98 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வால்..!

வியாழன், 11 மே 2023 (22:40 IST)
இன்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் இலக்கை அடித்து அபார வெற்றி பெற்று உள்ளது. 
 
இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து எட்டு விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்தது. இதனை அடுத்து 150 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான அணி ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 13.1 ஓவர்களில் 151 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 
 
ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் மிக அபாரமாக விளையாடி 98 ரன்கள் அடித்தார் என்பதும் அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் சஞ்சு சாம்சன் 48 ரன்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 12 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்