கோலியிடம் கோபப்பட்ட புஜாரா… காரணம் என்ன தெரியுமா?

புதன், 14 ஜூலை 2021 (16:04 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலிக்கும் சத்தேஸ்வர் புஜாராவுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய தூண் என்றால் அது புஜாராதான். சமீபத்தில் நடந்த ஆஸி தொடரில் அவர் உடல் முழுவதும் பந்துகளால் அடிவாங்கி நின்ற போட்டியே அதற்கு சாட்சி. ஆனால் இப்போது புஜாராவுக்கே ஆப்பு வைக்க கோலி எண்ணிவிட்டதாக சொல்லப்படுகிறது. 34 வயதாகும் புஜாராவுக்கு மாற்று வீரர்களை தயார் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

அதை இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்தே சோதனை செய்து பார்க்க கோலி முயல்வதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் ஓய்வறையில் நடந்த ஆலோசனையில் கே எல் ராகுலை புஜாராவுக்கு பதில் இறக்கலாம் என்பது குறித்து ஆலோசித்த போது கடுப்பான புஜாரா ‘நான் வேண்டுமானால் இந்தியாவுக்கு சென்றுவிடவா?’ எனக் கோபமாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி ஆன கோலி அவரை சமாதானப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்