அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து! – தங்கம் வெல்வாரா என எதிர்பார்ப்பு!

வெள்ளி, 30 ஜூலை 2021 (15:07 IST)
டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்று போட்டியில் பங்கேற்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்

இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதி பேட்மிண்டன் போட்டியில் ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-13, 22-20 என்ற பாயிண்ட் கணக்கில் யமாகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் பி.வி.சிந்து வென்று இறுதி போட்டியில் நுழைந்தால் பதக்கம் வெல்வது உறுதி.

கடந்த ஒலிம்பிக்கில் இறுதி போட்டி வரை சென்று வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து இந்த முறை தங்க பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்