உலகில் அதிக தொகைக்கு ஒப்பந்தமான எம்பாப்பே...?

திங்கள், 24 ஜூலை 2023 (21:24 IST)
சர்வதேச கால்பந்து போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் எம்பாப்பே திறமையாக விளையாடி வருகிறார். இவர் , மெஸ்ஸி, ரொனால்டோ,  நெய்மர் ஆகியோரை அடுத்து அடுத்த தலைமுறை நட்சத்திர கால்பந்தாட்ட ஆட்டக்காரராக உலகம் முழுவதும் அறியப்படுகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற  உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்து கோல்டன் பூட் விருதையும் அவர் கைப்பற்றினார்.  தற்போதைய கால்பந்து வீரர்களில் அதிக மதிப்பு மிக்க வீரர்களில் முதலிடத்தில்  எம்பாப்பே உள்ளார்.

ஆசிய சுற்றுப் பயணத்திற்கான பிஎஸ்ஜி கிளப் அணியில் எம்பாப்பே இடம்பெறாத நிலையில், அவர் அணிமாறலாம் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், சவூதியில் உள்ள அல் ஹிலால் கிளப் அணி ரூ.2700 கோடிக்கு எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த  ஒப்பந்தம் பற்றிய அதிகாரப்பூர்வ  உலகளவில் அதிக தொகைக்கு ஒப்பந்தமாகும் வீரர் என்ற சாதனையை அவர் படைக்கலாம் என்ற தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்