இந்தியாவுக்குள்ளாகவே நான் நிறபாகுபாட்டுக்கு ஆளாகியுள்ளேன்… மூத்த வீரர் ஆதங்கம்!

திங்கள், 29 நவம்பர் 2021 (10:48 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவரான லஷ்மன் சிவராமகிருஷ்ணன் தான் நிற பாகுபாட்டுக்கு ஆளாகியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 1983 முதல் 1987 வரை நான்காண்டுகளில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் லஷ்மன் சிவராமகிருஷ்ணன். மிகக்குறைந்த காலமே இந்திய அணியில் ஆடிய அவர் பின்னர் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். சுழல்பந்து குறித்து நுணுக்கமான விமர்சனங்களையும் கருத்துகளையும் தெரிவித்து அவருக்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் பகிர்ந்திருந்த டிவிட் ஒன்றில் ‘என்னுடைய வாழ்க்கை முழுவதும் நான் விமர்சனங்களுக்கும் நிறவெறி பாகுபாட்டுக்கும் ஆளாகியுள்ளேன். துரதிர்ஷ்டவசமாக அந்த பாகுபாடு இந்தியாவுக்குள்ளும் நடந்துள்ளது’ எனக் கூறியுள்ளார். அவரின் இந்த டிவீட் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்