அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளிக்கும் விதமாக ஜெய்ஸ்வால் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்களும் பெரிய இன்னிங்ஸ்களை கட்டமைக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கருண் நாயர் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்து அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 204 ரன்கள் சேர்த்துள்ளது.