டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் எடுத்த அதிரடி முடிவு..!

வியாழன், 4 மே 2023 (19:06 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47வது போட்டி இன்று கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியின் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ரானா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார் 
 
இதனை எடுத்து கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலை பொருத்தவரை கொல்கத்தா அணி ஆறு புள்ளிகள் உடன் எட்டாவது இடத்தில் உள்ளது என்பதும் ஹைதராபாத் அணி அதே ஆறு புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இருக்கின்றதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்