தோனியை களமிறக்க கங்குலியை சமாதானப்படுத்த வேண்டி இருந்தது… கிரன் மோரே தகவல்!

புதன், 2 ஜூன் 2021 (11:36 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தேர்வுக்கு கங்குலியை சமாதானப்படுத்த வேண்டி இருந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கங்குலி இருந்த போது நிறைய புதுமுக வீரர்களை அறிமுகப்படுத்தி இந்திய அணியை மறு கட்டமைப்பு செய்தார். அவரின் தலைமையின் கீழ்தான் யுவ்ராஜ், கைப், ஜாகீர்கான், நெஹ்ரா, தோனி உள்ளிட்ட உலகத்தரம் மிக்க வீரர்கள் அறிமுகமானார்கள்.

இந்திய அணிக்கு அதிரடி பேட்டிங் விளையாடக் கூடிய விக்கெட் கீப்பர்க்கான தேடுதலின் போது கிடைத்தவர் தோனி. அவரை துலிப் கோப்பையில் மேற்கு மண்டல அணிக்காக விளையாட களமிறக்க கங்குலியை சமாதானப்படுத்த வேண்டி இருந்ததாக அப்போதைய தேர்வுக்குழு தலைவர் கிரண் மோரே தெரிவித்துள்ளார். அதில் சிறப்பாக விளையாடிய தோனி அதன் பின்னர் இந்திய அணிக்குக் கேப்டனாக வந்து 2 உலகக் கோப்பைகளை தன் தலைமையின் கீழ் பெற்றுத்தந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்