கங்குலி உடல்நிலை சீராக உள்ளது… ஜெய்ஷா அறிவிப்பு!

சனி, 2 ஜனவரி 2021 (17:13 IST)
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சௌவ்ரவ் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளதாக ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலி தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கிறார். அவர் தலைமையில் அமீரகத்தில் கொரோனா காலத்திலும் ஐபிஎல் தொடர் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை கொல்கத்தாவில் அவர் வீட்டில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கங்குலிக்கு ஹார்ட் சம்பந்தமான பிரச்சனை உள்ளதால் அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிசிசிஐ செயலர் ஜெய் ஷா ‘கங்குலி விரைவாக மீண்டு வர வேண்டும். அவரின் குடும்பத்தினருடன் பேசினேன். தாதாவின் உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சைக்கு அவர் உடல்நிலை நன்கு ஒத்துழைக்கிறது’ எனவும் அவர் கூறியுள்ளார். முன்னாள் வீரர்கள் பலர் அவர் சீக்கிரமே குணமாகவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து டிவீட் செய்துள்ளனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்