டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் செய்ய முடிவு!

ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (15:43 IST)
ஐபிஎல் 2018 தொடரில் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல்2018 தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. கடைசி நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரீல் வெற்றி பெற்றது.
 
இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் முதல் போட்டியில் பஞ்சாப் அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன. இதுவரை சென்னை அணியில் விளையாடி வந்த அஸ்வின் தற்போது பஞ்சாப் அணியின் கேப்டான விளையாடுகிறார். 
 
கவுதம் கம்பீர் தலைமையில் டெல்லி அணி விளையாடுகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி இன்னும் சற்று நேரத்தில் டெல்லி அணி களமிறங்க உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்