செப்டம்பர் 15 முதல் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள்… எந்த நாட்டில் தெரியுமா?

செவ்வாய், 25 மே 2021 (07:56 IST)
பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் நடத்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கிய நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இதுவரை 29 போட்டிகள் மட்டும் நடத்தப்பட்ட நிலையில் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனால் எப்படியாவது மீதி போட்டிகளை உலகக்கோப்பை டி 20 போட்டிக்கு முன்னர் நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டுகிறது. போட்டிகளில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட் அல்லது இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இப்போது கடந்த ஆண்டு நடந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்களிலேயே போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை ஒருவாரம் முன்னதாக செப்டம்பர் 7 ஆம் தேதியே முடிக்க சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சம்மதிக்கும் பட்சத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் எஞ்சிய போட்டிகள் நடத்தப்படும்.
  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்