ஐபிஎல் போட்டி ஓடிடியில் இலவச ஒளிபரப்பு: ஜியோ அறிவிப்பு..!

வியாழன், 16 பிப்ரவரி 2023 (15:09 IST)
அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் ஓடிடியில் இலவசமாக ஒளிபரப்பு இருப்பதாக ஜியோ நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. 
 
சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை ஜியோ சினிமா ஓடிடியில் இலவசமாக ஒளிபரப்பானது. இதை கோடிக்கணக்கான மக்கள் கண்டுபிடித்தனர். 
 
இந்நிலையில் 2023 வரை 2027 வரை ஐந்து ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டியை ஒளிபரப்ப சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. டிஸ்னி ஸ்டார் நிறுவனம் இந்த ஏலத்தை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமாவில் இலவசமாக ஒளிபரப்பு ஏற்பதாக அந் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதிரடியாக தெரிவித்துள்ளார். சந்தா கட்ட முடியாதவர்கள் ஐபிஎல் போட்டியை பார்க்க முடியாத நிலை இருக்கக்கூடாது என்பதற்காக இலவசமாக ஒளிபரப்பு செய்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்