இந்த நிலையில், போட்டி தொடங்கும் முன்பாக மைதானத்தில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. காரணம், நேற்று அதிகாலை இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை எதிர்த்து அதிரடியாக தாக்குதல் நடத்தியது.
சாதாரணமாக, ஐபிஎல் போட்டிக்கு முன் தேசிய கீதம் ஒலிக்கப்படுவதில்லை. ஆனால், பாகிஸ்தானை எதிர்த்து நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு மரியாதை செய்வதற்காகவே இந்த முறை தேசிய கீதம் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.