3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

Siva

செவ்வாய், 3 ஜூன் 2025 (20:46 IST)
ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற்று வரும் நிலையில், டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, தற்போது பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது.
 
சால்ட் மற்றும் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிலையில், சால்ட் 16 ரன்களில் அவுட் ஆனார். அதன் பிறகு வந்த மயங்க் அகர்வால், இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடித்து 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கேப்டன் ரஜத் படிதார் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து 26 ரன்களில் அவுட் ஆனார்.
 
இந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய விராட் கோலி தான் தற்போது 43 ரன்கள் அடித்து அணியை போராடி காப்பாற்றி வருகிறார். சற்று முன் வரை, பெங்களூர் அணி 15 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த மைதானத்தை பொருத்தவரை, 190 முதல் 200 ரன்கள் எடுத்தால் மட்டுமே முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இன்னும் 5 ஓவர்களில் 60 முதல் 70 ரன்கள் பெங்களூர் அணி அடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
பஞ்சாப் பவுலிங்கை பொறுத்தவரை, ஜேமின்சன் இரண்டு விக்கட்டுகளையும், சாஹல் ஒரு விக்கெட்டையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்