தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட் எத்தனை ரன்கள்?

வெள்ளி, 21 ஜனவரி 2022 (18:10 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதலாவது பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 287 ரன்கள் எடுத்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 288 ரன்கள் என்ற இலக்கை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர் 55 ரன்கள் எடுத்தார் என்பதும், ரிஷப் பண்ட் 85 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கடைசி நேரத்தில் ஷர்துல் தாக்குர் 40 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 288 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்