இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல் 90 ரன்கள் எடுத்த நிலையில் சதத்தை நூலிழையில் தவறவிட்டார். மறுமுனையில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 90 ரன்களுடன் சதத்தை நோக்கி விளையாடி வருகிறார், இன்னும் சில நிமிடங்களில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய நாள் முழுவதும் இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட் இழப்பின்றி நிலைத்து நின்று விளையாடினால், இந்த போட்டியை டிரா செய்ய முடியும். எனவே, போட்டியை டிரா செய்ய இந்திய பேட்ஸ்மேன்கள் கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து தரப்பில், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.