மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு!

வியாழன், 27 ஜனவரி 2022 (07:30 IST)
மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு!
இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் இந்த தொடரில் கலந்துகொள்ள இருக்கும் இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதில் ரோகித் சர்மா மீண்டும் களம் இறங்க இருக்கிறார் என்பதும் அவர் கேப்டனாக செயல்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் கேஎல் ராகுல் துணை கேப்டனாக செயல்பட இருக்கிறார்
 
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்கள் பின்வருமாறு:
 
ரோஹித்சர்மா, கே.எல்.ராகுல், ருத்ராஜ், தவான், விராத் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னொய், சிராஜ், பிரசித் கிருஷ்னா, அவெஷ் கான்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்