6 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா: மீண்டும் இன்னிங்ஸ் தோல்வியா?

வியாழன், 2 செப்டம்பர் 2021 (20:37 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது
 
இந்த நிலையில் சற்று முன் வரை இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்துள்ளது. முன்னணி பேட்ஸ்மேன்கள் கே.எல்.ராகு, ரோகித் சர்மா, புஜாரா, விராத் கோலி, ஜடேஜா மற்றும் ரஹானே ஆகிய 6 பேரும் அவுட் ஆகி விட்டனர் என்பதும் தற்போது ரிஷப் பண்ட் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதில் விராத் கோலி மட்டுமே 50 ரன்கள் எடுத்துள்ளார் என்றும் மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்த நிலையில் இந்த போட்டியிலும் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்து விடுமோ என்ற அச்சத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்