இன்றைய போட்டியில் இடம் பிடிக்காத அஸ்வின்… கடுப்பான ரசிகர்கள்!

வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:39 IST)
இந்திய அணியில் இன்றும் அஸ்வின் இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் இன்று ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளைப்  தொடர் சமனில் உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

லீட்ஸ் டெஸ்ட் தோல்வியால் இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கடுப்பான ரசிகர்கள் அணித்தேர்வை விமர்சித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்