ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறாரா ஹர்பஜன்!

புதன், 8 டிசம்பர் 2021 (10:17 IST)
இந்திய அணியின் மூத்த சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் அணி ஒன்றுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணியின் மூத்த சுழல்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக சர்வதேச அணியில் இடம் பிடிக்கவில்லை. ஆனால் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது 41 வயதாகும் அவர் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிக்கவில்லை.

இந்நிலையில் இப்போது ஐபிஎல் தொடரில் இரு அணிகளுக்கு பயிற்சியாளராக இருக்கும்படி அவரை இரு அணிகள் அணுகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அவர் சர்வதேக கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து வடிவ போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்து பயிற்சியாளராகும் முடிவை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்