இங்கிலாந்துக்கு செல்லாத கங்குலி ! பிசிசிஐ தகவல்!

புதன், 2 ஜூன் 2021 (11:47 IST)
இங்கிலாந்தில் நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியைக் காண பிசிசிஐ தலைவர் கங்குலி செல்லவில்லை.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஜூன் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இங்கிலாந்துக்கு நாளை இந்திய வீரர்கள் தனி விமானம் மூலமாக செல்ல உள்ளனர். இங்கிலாந்தில் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இருக்க வேண்டி இருப்பதால் தங்கள் குடும்பத்தினரை அழைத்து செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்தனர். அதற்கு பிசிசிஐயும் சம்மதித்துள்ளது. இந்நிலையில் அனைத்து வீரர்களும் நாளை குடும்பத்தினருடன் சவுத்தாம்ப்டனுக்கு சென்று அங்குள்ள ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘வீரர்களை குடும்பத்தினரோடு வருவதற்கு பிரிட்டன் அரசுக்கு நன்றி. அது வீரர்களின் மனநிலையை மேம்படுத்த உதவும். தனிமைப்படுத்திக் கொள்ளும் நாட்கள் அதிகமாக உள்ளதால் பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் செல்லவில்லை’ எனக் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்