தோனி வந்தபோதே எனக்கு தெரிந்துவிட்டது… தினேஷ் கார்த்திக் கருத்து!

திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (16:22 IST)
தோனி வந்த பின் இந்திய அணியில் தன் வாய்ப்புகள் பறிபோனது குறித்து தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இந்திய அணியில் மிக நீண்ட காலமாக தனக்கான இடத்துக்காக போராடியவர் தினேஷ் கார்த்திக். ஆனால் தோனியின் வரவால் தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெறுவதில் அவருக்கு சிக்கல் எழுந்தது. இதனால் அவ்வப்போது இடம் கிடைப்பதும், பின்னர் அணிக்கு வெளியே உட்கார வைக்கப்படுவதாகவும் இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் தோனியால் தன் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது குறித்து பேசியுள்ளார். அதில் ‘தோனி ஒரு புயல் போல வந்தார். ப்போதே எனக்கு தெரிந்துவிட்டது, இந்திய அணியில் எனக்கான கதவு மூடப்பட்டது என்று. அவர் ஒரு தலைமுறைக்கான வீரராக இருந்தார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் எப்போதாவதுதான் அமைவார்கள். சையத் கிர்மானி மற்றும் கிரண் மோரேவுக்கு பின் அப்படி அமைந்தவர் தோனிதான்.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்