நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் அணியிடம் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த நிலையில், ஒரு சீசனில் சொந்த மைதானத்தில் அதிக தோல்வி அடைந்த அணி என்ற மோசமான சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்று இருப்பது, ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை மைதானத்தில் நான்கு தோல்விகளை அடைந்திருந்த சிஎஸ்கே அணி, 2012 ஆம் ஆண்டும் சொந்த மைதானத்தில் நான்கு தோல்விகளை அடைந்தது. அதன் பிறகு தற்போது 2025 ஆம் ஆண்டில் சொந்த மைதானத்தில் 5 தோல்விகளை அடைந்து, முந்தைய சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி, இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்று நான்கு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது என்பதும், தொடரிலிருந்து சிஎஸ்கே அணி வெளியேறிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.