ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்ற பெங்களூருக்கு எத்தனை கோடி? பஞ்சாபுக்கு எத்தனை கோடி?

Siva

புதன், 4 ஜூன் 2025 (07:09 IST)
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்ற பெங்களூர் அணிக்கு, ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அந்த அணிக்கு கிடைத்த பரிசுகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற பெங்களூர் அணி, 18 ஆண்டுகால கனவு நனவானது. அதனால், அதன் வீரர்கள் உற்சாகமாக உள்ளனர்.

இந்த நிலையில், ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்ற பெங்களூரு அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. வெறும் ஆறு ரன்களில் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாம் இடத்தை பிடித்த பஞ்சாப் அணிக்கு, 13 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் இறுதிப்போட்டி வரை சென்று, இரண்டாவது முறையாக பஞ்சாப் அணி கோப்பையை நழுவ விட்டது என்பதும், பஞ்சாப் கடந்த 18 ஆண்டு கால கோப்பை கனவு மீண்டும் தகர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோப்பையை வென்றவுடன், "விராட் கோலி என் ஆன்மா, இதயம், எல்லாமே பெங்களூர் அணி தான். ஐபிஎல் இல் நான் விளையாட போகும் கடைசி நாள் வரை, பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடுவேன்," என்று உணர்ச்சிவசத்துடன் கூறினார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்