கோலிக்கு மூன்றாவது, அஷ்வினுக்கு இரண்டாவது: என்னது??

வியாழன், 2 மார்ச் 2017 (13:42 IST)
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) சார்பில் சிறந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவிப்பது வழக்கம். 


 
 
இந்த ஆண்டுக்கான விருதுகள் வரும் மார்ச் 8 ஆம் தேதி பெங்களூருவில் நடக்கவுள்ளது. இந்திய கேப்டன் கோலிக்கு இந்த ஆண்டுக்கான பாலி உம்ரேக்கர் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விழாவில் இந்திய கேப்டன் கோலிக்கு பாலி உம்ரேக்கர் விருது வழங்கப்பட உள்ளது.
 
கோலி இந்த விருதை மூன்றாவது முறையாக பெறுகிறார். மேலும், இவ்விருதை மூன்று முறை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். 
 
அதே போல், தமிழக வீரர் அஷ்வினுக்கு திலிப் சர்தேசாய் விருது வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்த விருதை இரண்டாவது முறையாக பெரும் முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் அஷ்வின்.

வெப்துனியாவைப் படிக்கவும்