151 ரன்கள் இலக்கு கொடுத்த வங்கதேசம்: 3 ஓவரில் 2 விக்கெட்டை இழந்த ஜிம்பாவே!

ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (10:40 IST)
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்துள்ளது 
 
தொடக்க ஆட்டக்காரரான நிஜ்முல் ஹோசைன் 71 ரன்கள் எடுத்த நிலையில் 151 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் ஜிம்பாவே அணி 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது. சற்று முன் வரை அந்த அணி வெறும் 18 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் 
 
இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி வென்று இந்தியாவை பின்னுக்கு தள்ளுமா அல்லது வங்கதேச அணி வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
இன்று மதியம் 12.30  மணிக்கு பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் இன்று மாலை 4.30  மணிக்கு இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்