மகளிர் ஐபிஎல்: குஜராத் அணியை அடித்து நொறுக்கிய பெங்களூரு.. புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!

Siva
புதன், 28 பிப்ரவரி 2024 (06:55 IST)
கடந்த சில நாட்களாக மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் அணியை பெங்களூர் அணி வீழ்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 108 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி 12.3 இரண்டு விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

இந்த போட்டியில் மிக அபாரமாக விளையாடிய ரேணுகா சிங் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் அவர் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பெங்களூர் அணி நேற்றைய வெற்றி காரணமாக நான்கு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது, மும்பை, டெல்லி ஆகிய அணிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்