ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் திடீர் மாற்றம்: கங்குலி அதிரடி அறிவிப்பு

சனி, 29 பிப்ரவரி 2020 (07:43 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் திடீர் மாற்றம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி பாகிஸ்தானில் நடைபெற இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த போட்டி துபாயில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அதிரடியாக அறிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே பாகிஸ்தானில் பல நாடுகள் சுற்றுப்பயணம் செய்ய தயங்கி வரும் நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடந்தால் அதன் பின்னர் ஒரு சில நாடுகள் பாகிஸ்தானில் விளையாட வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
இந்த நிலையில் திடீரென பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் நடைபெறாது என்றும் துபாயில் தான் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர்  சௌரவ் கங்குலி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சௌரவ் கங்குலியின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்