குஜராத்துக்கு கொல்கத்தா கொடுத்த இலக்கு இவ்வளவு தானா? வெற்றி யாருக்கு?

சனி, 29 ஏப்ரல் 2023 (18:08 IST)
ஐபிஎல் தொடரின் 39ஆவது போட்டியில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. 
 
கடந்த சில போட்டிகளாக முதலில் பேட்டிங் செய்யும் அணியை 200க்கும் அதிகமாக எடுத்து வரும் நிலையில் 179 என்பது குறைவான ஸ்கோராக பார்க்கப்படுகிறது. 
 
தொடக்க ஆட்டக்காரரான ரமனுல்லா குர்பஸ்  அபாரமாக விளையாடி 81 ரன்கள் அடித்தார். இதனை அடுத்து 180 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் குஜராத் அணி பேட்டிங் செய்ய உள்ளது 
 
180 என்ற இலக்கை குஜராத் அணி எட்டி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்