தமிழக அரசு தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கி வரும் நிலையில், இதில் விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விடுபட்ட மகளிர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்த வகையில், அதற்கான முதல் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும், மகளிர் உதவித்தொகை தரும் தேதியும் அறிவிக்கப்படும் என்றும்," அவர் தெரிவித்தார். "சென்ற முறை எப்படி சரியாக மகளிர் உதவித்தொகை வழங்கப்பட்டதோ, அதேபோல் இந்த முறையும் விடுபட்டவர்களுக்கு நிச்சயமாக மகளிர் உதவித்தொகை வழங்கப்படும் என்றும்," அவர் உறுதியளித்தார்.