வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் உள்பட 3 போ் கைது

J.Durai

சனி, 11 மே 2024 (14:23 IST)
திருவான்மியூா் ரங்கநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ச.பொன்னி (58). இவா் அங்கு தனது மருமகன் ஐயப்பன் என்பவருடன் வசித்து வந்தாா். 
 
ஐயப்பன் வியாழக்கிழமை வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த பொன்னி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
 
இது குறித்து திருவான்மியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் பொன்னி வீட்டின் அருகே வசிக்கும் ஒரு சிறுவனும், அவரது கூட்டாளிகளான பெசன்ட்நகா் திடீா் நகரைச் சோ்ந்த ர.விக்னேஷ் (20), மு.தீனா (21) ஆகிய 3 பேரும் கொலை செய்தது தெரியவந்தது.
 
இதையடுத்து போலீஸாா், 3 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில், கைது செய்யப்பட்ட சிறுவன், தனது வீட்டில் பெற்றோா் இல்லாத நேரத்தில் தனது நண்பா்களுடன் மது அருந்திவிட்டு, தான் காதலிக்கும் ஒரு பெண்ணை வீட்டுக்கு அடிக்கடி அழைத்துள்ளாா்.
 
இதைப் பாா்த்த பொன்னி, அந்தச் சிறுவனை கண்டித்துள்ளாா். மேலும், இது குறித்து அவரது பெற்றோரிடம் பொன்னி தெரிவித்துள்ளாா்.
 
இதனால் ஆத்திரமடைந்த அந்தச் சிறுவன், தனது கூட்டாளிகளுடன் சோ்த்து பொன்னியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்