தேர்தலில் யார் வெற்றி பெற்றால் நல்லது நடக்கும் ? ஜக்கி வாசுதேவின் வைரல் வீடியோ

செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (19:15 IST)
அனைத்துக் கட்சிகளும் 40மக்களவை தொகுதிகள், 19 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்காக  தீவிரமான பிரசாரத்தில் ஈடுப்பட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுடன் இறுதிகட்ட பிரசாரம் முடிவடைந்தது.
நாளை மறுதினம் நடைபெறவுள்ள தேர்தல் பற்றி ஈஷா யோகம் அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அமெரிக்காவில் இருந்து பொதுமக்களுக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
அதில் அவர் கூறியுள்ளதாவது :
 
’’தேர்தல் நாளன்று மக்கள் ஜாதி, மதம், மற்றும் பணம் ஆகியவற்றைக் கொண்டு வாக்களிக்க வேண்டாம். நாட்டின் சக்தியை நிர்ணயிக்கும் சக்தி மக்களிடம் உள்ளது. எனவே ’’இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றால் நல்லது நடக்கும் என்று நினைக்கின்றீர்களோ அவர்களுக்கு  வாக்களிக்க வேண்டும்’’  என ஜக்கிவாசுதேவ் தெரிவித்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்