என் கணவர் எங்கே? - காவல்நிலையத்தில் கதறும் திருநங்கை

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (14:07 IST)
திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை மாயா(28) புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள பூவாலக்குடியைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


 


இதை அடுத்து, இருவரும் கணவன், மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இதை அறிந்த தமிழ்வாணன் குடும்பத்தினர் அவரை மாயாவிடமிருந்து பிரித்துச் சென்றுவிட்டனர். இதை தொடர்ந்து, திருச்சி காவல் ஆணையரிடம் மாயா புகார் செய்தார்.

அந்த மனுவில், “ தமிழ்வாணனும் நானும் விரும்பி திருமணம் செய்தோம். நான் அவருடன் வாழ்வதற்காக 3 லட்சம் கடன் வாங்கியுள்ளேன். அவரை நான் கடத்தி வைத்திருப்பதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில், என்னுடன் வாழ்வதாகவும், சேர்ந்து கடனை அடைப்பதாகவும் போலீஸாரிடம் அவர் எழுதிக் கொடுத்தார். இதனையடுத்து சேர்ந்து வாழ்ந்தோம். ஆனால், இப்போது என் கணவரை, அவரது குடும்பத்தினர் கடத்தி வைத்துள்ளனர். அவர் எங்கே இருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. எனது கணவரை மீட்டுத் தாருங்கள்” என்று கூறி இருந்தார்.
அடுத்த கட்டுரையில்