தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை: கோவை மேயர் அறிவிப்பு

புதன், 26 அக்டோபர் 2022 (18:58 IST)
தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை: கோவை மேயர் அறிவிப்பு
நகரத்தை தூய்மை பணி செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும் என கோவை மேயர் அதிரடியாக அறிவித்துள்ளார். 
 
தூய்மை பணியாளர்களுக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதும் இது குறித்து அரசு பரிசீலித்து வந்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கோவை தூய்மை பணியாளர்களுக்கு சுழற்சிமுறையில் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என கோவை மாநகராட்சி மேயர் அதிரடியாக அறிவித்துள்ளார் 
 
மேலும் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்க 100 பேட்டரி வாகனங்கள் வாங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து தூய்மைப் பணியாளர்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்