டாஸ்மாக்கில் துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளை… க்ளைமேக்ஸில் நடந்த டிவிஸ்ட்!

வெள்ளி, 4 ஜூன் 2021 (17:22 IST)
வேலூர் அருகே டாஸ்மாக் கடையில் துளையிட்டு கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் உள் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது. அது போல ஒரு சம்பவமாக வேலூர் அருகே காட்பாடியில் டாஸ்மாக் கட்டிடத்தின் சுவரில் துளையிட்டு கொள்ளையர்கள் கொள்ளை அடித்துள்ளனர்.

அதில் சில பாட்டில்களை கடைக்கு அருகே உள்ள முள் புதரில் ஒளித்து வைத்து சென்றுள்ளனர். அதையறிந்த அப்பகுதி மக்கள் மதுபாட்டில்களை எல்லாம் எடுத்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து வந்த காவலர்கள் வந்து பார்த்த போது சிசிடிவி கேமரா காட்சிகளின் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்து சென்றதால் விசாரணையை தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்