வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

வெள்ளி, 4 ஜூன் 2021 (17:14 IST)
வண்டலூர் பூங்காவில் இருக்கும் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வரும் நிலையில் இதுவரை மனிதர்களுக்கு மட்டுமே பாதிப்புக் கண்டுபிடிக்கபட்டு வந்தது. இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் 9 சிங்கங்களுக்கு இப்போது கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் மீனா என்ற பெண் சிங்கம் உயிரிழந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து மற்ற சிங்கங்களுக்கும் சோதனை செய்யவும், பாதிப்பு ஏற்பட்டுள்ள சிங்கங்களை தனிமைப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே போல ஊழியர்களும் கொரோனா சோதனை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்