ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வதாக கூறி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளும் ஈரான் மீது முதல் தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணை மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.. இதைத்தொடர்ந்து வளைகுடா நாடுகளில் பதட்டம் ஏற்பட்டிருக்கிறது.. கடந்த மூன்று நாட்களில் நடந்த போரில் 700க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணை மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.. இதைத்தொடர்ந்து வளைகுடா நாடுகளில் பதட்டம் ஏற்பட்டிருக்கிறது.. கடந்த மூன்று நாட்களில் நடந்த போரில் 600 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
ஒருபக்கம், ஈரான் போரால் இந்தியாவுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என ஒரு தகவல் பரவி வருகிறது. ஒருவேளை மத்திய கிழக்கில் போர் மூண்டால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கிடைக்காமல் போகும். அதனால் பெட்ரோல் டீசல் கடுமையாக உயரும்.. கேஸ் தட்டுப்பாடு ஏற்படும்.. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் என பலரும் கூறி வருகிறார்கள்.
எனவே இந்த போரை நிறுத்துவதற்கு இந்தியாவின் முயற்சி செய்ய வேண்டும் என்பதை சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது..