வகுப்பறையில் குத்தாட்டம்; விளக்கம் கேட்டால் தள்ளாட்டம்! – 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

திங்கள், 27 செப்டம்பர் 2021 (08:56 IST)
உத்தரபிரதேசத்தில் பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் நடனம் ஆடியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் கடந்த மார்ச் மாதம் ஆசிரியர்கள் சிலர் மாணவ, மாணவிகள் முன்னால் சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில் இதுகுறித்து உத்தரபிரதேச கல்வித்துறை விளக்கம் அளிக்க கோரி டான்ஸ் ஆடிய 4 ஆசிரியர்கள் மற்றும் அப்பள்ளி தலைமை ஆசிரியருக்கும் உத்தரவிட்டது. இதில் அவர்கள் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் அவர்களை பணியிடை நீக்கம் செய்வதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்