சாலையில் டான்ஸ் ஆடிய பெண்ணுக்கு போலீஸார் நோட்டீஸ்

வியாழன், 16 செப்டம்பர் 2021 (22:16 IST)
இந்தியாவில் கொரொனா 2 வது அலை வேகமாகப் பரவி வருகிறது. எனவே இதைத் தடுக்க மத்திய அரசு கொரொனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக விநியோகித்து வருகிறது. அதேசமயம் சமூக இடைவெளி, முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்த வேண்டுமெனக் கூறி வருகிறது.

இந்நிலையில், மக்கள் முகக்கவசம் அணிய வலியுறுத்தி இந்தூர் நகர சிக்னல் பகுதியில் ஒரு இளம்பெண் டான்ஸ் ஆடினார்.

இந்த வீடியோயை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அது வைரலானது. எனவே, சாலையில் டான்ஸ் ஆடியது குறித்து விளக்கம் கேட்டு காவல்துறை அப்பெண்ணிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக அப்பெண்ணுக்குக் காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்