சேப்பாக்கம் தொகுதியில் தடுப்பூசி முகாம்: பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி!

வியாழன், 29 ஜூலை 2021 (20:45 IST)
சேப்பாக்கம் தொகுதியில் தடுப்பூசி முகாம்களில் மிகவும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வரும் பொதுமக்களுக்கு உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து டுவிட்டுக்களை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
கொரோனா தொற்றை ஒழிக்கும் நடவடிக்கையாக சேப்பாக்கம், 63 அ வட்டம், பூபேகம் 2-வது தெரு பகுதியில் இன்றும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்று தொகுதி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நன்றி.
 
சேப்பாக்கம், 114அ வட்டம், அருணாச்சலம் தெரு பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தொற்றை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு  அவசியமென அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. 
 
கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்க தடுப்பூசியே ஆயுதம் என உணர்ந்து திருவல்லிக்கேணி தொகுதி, 119 அ வட்டம், சைவ முத்தையா தெரு பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் இன்று அதிகளவில் வருகை தந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்