சேப்பாக்கம் தொகுதியில் தடுப்பூசி முகாம்: மக்களுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி

புதன், 28 ஜூலை 2021 (20:15 IST)
உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதியில் இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் நன்றி என தனது டுவிட்டர் பக்கத்தில் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
தடுப்பூசியிடுவதே கொரோனா தடுப்பின் முக்கிய முன்னெடுப்பு என்பதை உணர்ந்து சேப்பாக்கம் பகுதி, 115 வது வட்டம், ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் அருகே ஜானி ஜான் சாலை பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். நன்றி
 
திருவல்லிக்கேணி, பீட்டர்ஸ் சாலை பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்களிடம் முகக்கவசம் அணியவேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும் என்ற  தொற்று தடுப்பு வழிமுறைகள் பற்றி  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 
திருவல்லிக்கேணி, 115 அ வட்டம், ஷேக் தாவூத் தெரு பகுதியில் இன்றும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தடுப்பூசி செலுத்திக்கொண்டு, தொற்று பரவலை தடுக்க அரசு கூறியுள்ள வழிமுறைகளை பின்பற்றுவோம் என உறுதியளித்த பொது மக்களுக்கு நன்றி.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்